ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம் 1998ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாகப் பயணிக்கிறது. ஐதராபாத் பகுதி வாழ் தமிழர்கள் தொடர்ந்து நம் மொழி, கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை நம் தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும், நல்ல பல நிகழ்ச்சிகளை, திட்டங்களை ஆண்டுதோறும் நம் சங்கம் முன்னெடுத்து வருகிறது.
தொடரும் ஆண்டுகளிலும் உங்களின் நட்பும், ஆதரவும் நமது தமிழ்ச் சங்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்ற நம்பிக்கையுடன்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
அன்புடன்,
ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம்.